தகவல்தொடர்பு அதிகாரி வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள தகவல்தொடர்பு அதிகாரிப் பணிக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தகவல்தொடர்பு அதிகாரி வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள தகவல்தொடர்பு அதிகாரிப் பணிக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 26 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.11/2017

பணி: Office (Indian Information Service)

காலியிடங்கள்: 44 ( தமிழ் - 04, ஹிந்தி - 19, ஆங்கிலம் - 21)

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இளநிலை பட்டம் பெற்று Journalism, Mass Communication பிரிவில் டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது Journalism Mass Communication பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (தமிழ், ஆங்கிலம், ஹிந்தி பாடம் படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்)

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை  ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2017

விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் செய்து கொள்ள வேண்டிய கடைசி தேதி: 30.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com