தொழிற்பிரிவு பயிற்றாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க...

சமூக பாதுகாப்பு துறை நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவு பயிற்றாசிரியர் காலியிடத்துக்கு வரும் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சமூக பாதுகாப்பு துறை நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவு பயிற்றாசிரியர் காலியிடத்துக்கு வரும் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: சமூக பாதுகாப்புத் துறை நிறுவனங்களில் தொழிற்பிரிவு பயிற்றாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.

இப்பணியிடங்களுக்கு தகுதியானோர் www.socialdefence.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அதற்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும், தொழிற்கல்வி விவரங்களுடன் பூர்த்தி செய்து, சான்றிதழ் நகல்கள் இணைத்து வரும் 24-ஆம் தேதிக்குள் "ஆணையர், சமூகபாதுகாப்பு துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-16' என்ற முகவரியில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம்.

இது தொடர்பான விவரங்களுக்கு தொலைபேசி எண்:044-26426421, 26427022 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com