இளநிலைப் பொறியாளர் பணிக்கு நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பணியாளர் தேர்வாணையம்-கர்நாடகம், கேரள மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பணியாளர் தேர்வாணையம் இளநிலைப் பொறியாளர்(கட்டடம், இயந்திரவியல், மின்சாரவியல், அளவையியல் மற்றும் குத்தகை)பணியிடங்களுக்கு 2018, ஜன.5 முதல் 8-ஆம் தேதிவரை கணினி அடிப்படையிலான திறந்தநிலை தேர்வு நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தத் தேர்வில் பங்கேற்கவிரும்புவோரிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தேர்வுக்கு இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இணையதளத்தில் விண்ணப்பங்களைச் செலுத்தலாம்.
இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான எழுத்துத்தேர்வு 2 மணி நேரம் நடைபெறும் தேர்வுநடைமுறை, பாடத் திட்டங்கள், இதர விவரங்களை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையின் 9,10-ஆவது பத்திகளில் காணலாம்.
கர்நாடகம் மற்றும் கேரள மண்டல அலுவலகத்திற்குள்பட்டபகுதிகளில் இருந்து விண்ணப்பங்களை நவ.17-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இடஒதுக்கீடுக்கு தகுதியான எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு கல்விக் கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.