தில்லி சப்பார்டினேட் சர்வீஸ் வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 865 மருந்தாளுநர், வார்டன் உள்ளிட்ட 865 'குரூப் பி, சி' பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தில்லி பகுதியில் வசிக்கும் இந்திய குடியுரிமை பெற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Grade-II (DASS) in Services Department - 221
வயதுவரம்பு: 20-32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600
பணி: Pharmacist (Homeopathic) in Dte. of Ayush - 40
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800
பணி: Legal Assistant in Dte. of Education - 13
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Assistant Superintendent in Prison Department - 96
வயதுவரம்பு: 18-27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800
பணி: Matron (Only for Female) in Prison Department - 64
வயதுவரம்பு: 18-27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் 5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900
பணி: Warder (Only for Male) in Prison Department - 401
வயதுவரம்பு: 18-27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900
தகுதி: கலை, அறிவியல், வணிகம் மற்றும் விவசாயம், சட்டத்துறைகளில் பட்டம் பெற்றவர்கள், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் பட்டயம் மற்றும் பட்டமும் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஒரு முறை தேர்வு மற்றும் இருமுறை தேர்வு, திறன் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.dissbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.11.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://delhi.gov.in/wps/wcm/connect/0fa71a004316e21d98c3fe79527d2446/Advt.+No.+03-17.pdf?MOD=AJPERES&lmod=-353980737 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.