சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எனப்படும் ஐ.ஓ.சி.எல்., நிறுவனத்தில் பல்வேறு மண்டலங்களில் காலியாக இருக்கும் 214 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 214
காலியிடங்கள் விவரம்:
1. பாய்லர் ஆப்பரேஷன்ஸ் என்ஜினியரிங் - 33
2. குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசர் - 44
3. பயர் அண்டு சேப்டி ஆபிசர் - 50
4. மெடிக்கல் ஆபிசர் - 18
5. எச்.ஆர்., ஆபிசர் - 50
6. உதவி ஹிந்தி அதிகாரி - 19
வயதுவரம்பு: பாய்லர் ஆபரேஷன்ஸ் பணிக்கு 32க்குள்ளும், மெடிக்கல் ஆபிசர் பணிக்கு 32, எச்.ஆர்., அதிகாரி பணிக்கு 28, உதவி ஹிந்தி அதிகாரி பணிக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், பயர் என்ஜினியரிங் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள், வேதியியல் துறையில் பி.எச்.டி., எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ்., அனஸ்தாலஜி, கைனகாலஜி, ஆர்தோபீடிக்ஸ் போன்ற ஏதாவதொன்றில் தகுதி பெற்றவர்கள், எம்.பி.ஏ.(எச்.ஆர்), ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.11.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com/PeopleCareers/job.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.