பொதுத் துறையச் சேர்ந்த செயில் நிறுவனனம் மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் 467.22 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள அலாய் உருக்காலை, பாதுகாப்பு, ரயில்வே, மோட்டார் வாகனம், மின்சாரம், கனரக பொறியியல் துறைகளுக்குத் தேவையான உருக்குப் பொருள்களைத் தயாரித்து வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய உருக்கு தயாரிப்பு நிறுவனமான செயில் ஆண்டு விற்றுமுதல் ரூ.43,337 கோடி. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதியானவர்களிடமிருந்து செப்.25-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி: Nurse
காலியிடங்கள்: 46
பணியிடம்: துர்காபூர்
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.09.2017 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.