நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமாக செயல்பட்டு வந்த நிறுவனம் தற்போது என்.எல்.சி. இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்நிறுவனத்தில் தொழிற் பழகுநர் சட்டம் - 1961-இன் விதிகளுக்குட்பட்டு, கீழ் வரும் பிரிவுகளில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 453
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 73
2. Turner - 24
3. Mechanic (Motor Vehicle) - 83
4. Electrician - 77
5. Wireman - 63
6. Mechanic (Diesel) - 17
7. Mechanic (Tractor) - 21
8. Carpenter - 04
9. Plumber - 02
10. Welder - 55
11. PASAA - 17
பயிற்சி காலம்: மேற்கண்ட அனைத்து பிரிவுகளுக்கும் 1 ஆண்டு பயிற்சி அளிக்கப்படும்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7,406 வழங்கப்படும்.
தகுதி: மேற்கண்ட பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐடிஐ நிறுவனத்தில் சம்மந்தசப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
12. Medical Lab Technician (Pathology) & (Radiology) - 17
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதாந்திர உதவித்தொகையாக ரூ.6,480 வழங்கப்படும்.
பயிற்சி காலம்: 15 மாதங்கள்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதாந்திர உதவித்தொகையாக முதலாம் ஆண்டு ரூ.6,480, இரண்டாம் ஆண்டு ரூ.7,406 வழங்கப்படும்.
தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி இடம்: நெய்வேலி
வயதுவரம்பு: 01.10.2017 தேதியின்படி 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
துணை பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
வட்டம்-20, நெய்வேலி-607803.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேர கடைசி தேதி: 12.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nlcindia.com/new_website/careers/trade_apprentice_training_22092017.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.