முன்னணி பயிர் காப்பீட்டு நிறுவனமான இந்தியாவின் வேளாண் காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 50 நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து அக்டோபர் 10க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Administrative Officers
காலியிடங்கள்: 50
வயதுவரம்பு: 01.09.2017 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,795
தகுதி: விவசாயம் சார்ந்த துறைகளில் 60 சதவூத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., அல்லது பி.இ., பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.650. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.aicofindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.aicofindia.com/AICEng/General_Documents/Notices%20And%20Tenders/Recruitment_ad_with_clauses.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.