மருந்துசெய் உடனாளர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் காலியாக உள்ள மருந்துசெய் உடனாளர் பணிக்கு

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் காலியாக உள்ள மருந்துசெய் உடனாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 21 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் 25 மருந்துசெய் உடனாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு குறைந்தபட்சம் 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.16, 600 காலமுறை அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பம், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏப்ரல் 20 -ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அக்கால அவகாசம் மே 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விண்ணப்பங்கள் வந்து சேருவதற்கான தேதி ஏப்ரல் 27 -இல் இருந்து மே 21 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com