இந்திய எண்ணெய் கழக நிறுவனமான ஐ.ஓ.சி.எல்-யின் தெற்கு மண்டல கிளையில் காலியாக உள்ள நான்-எக்சிகியூட்டிவ் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 98
பணி: ஜூனியர் ஆபரேட்டர் -51
பணி: ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்) - 46
பணி: ஜூனியர் ஜார்ஜ்மேன் - 01 இந்த பணியிடங்கள் அனைத்தும் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கானதாகும்.
வயது வரம்பு: 18 முதல் 26க்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற பிரிவில் 2 ஆண்டு ஐடிஐ முடித்தவர்கள் ஜூனியர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படிப்புடன், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் ஜூனியர் ஆபரேட்டர் ஏவியேசன் பணிக்கு விண்ணப்பிக்கலாம், பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் ஜூனியர் ஜார்ஜ்மேன் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் பணித்திறன் தேர்வுகள் சோதிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150.
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.2.2018
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.2.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள் அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.