இந்திய ராணுவத்தில் தீயணைப்பு வீரர், ஓட்டுநர் பணி

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள "குரூப் சி" பணியிடங்களான தீயணைப்பு வீரர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் தீயணைப்பு வீரர், ஓட்டுநர் பணி

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள "குரூப் சி" பணியிடங்களான தீயணைப்பு வீரர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Fire Engine Driver
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.21,700
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி: Fire man
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.19,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் முதலுதவி, தீயணைப்பு உபகரணங்களை உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும். சிவில் மற்றும் ராணுவ துறைகளில் தீயணைப்பு வீரராக 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10602_11_0070_1718b.pdf என்ற ஆன்லைன் அறிவிப்பு லிங்கில் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ் பெறப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 898 AT Bn Asc, PIN- 905 898, C/O 56 APO

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.03.2018

மேலும் விவரங்கள் அறிய www.davp.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com