ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை, முதல்வர் ஜெயலலிதா மறைவு ஆகிய காரணங்களால் பல்கலைக்கழகத் துறைகள், இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டிசம்பர் 1,2,6,7,8,13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் முறையே டிசம்பர் 17, 19, 20, 21, 22, 23ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளன.
அதுபோல, டிசம்பர் 17, 19, 20, 21, 22, 23 தேதிகளில் நடத்தப்பட இருந்தத் தேர்வுகள் முறைய 2017 ஜனவரி 6, 7, 9, 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.