தேசிய அளவிலான 'நெட்' தகுதித் தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பைப் பெறுவதற்கும், ஆராய்ச்சி மாணவர்கள் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும் தேசிய அளவிலான 'நெட்' தகுதித் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.
2017-ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வு கடந்த நவம்பர் 5 -ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டது. தேர்வு முடிவுகளை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.