இக்கோவில் 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆழ்வார்களால் பாடப்பெற்ற சிறப்புடையது. இங்குள்ள தாயாரின் பெயர் கோமளவல்லி. பெருமாள் சாரங்கபாணி என்ற பெயரில் சேவை சாதிக்கிறார். இக்கோவிலில் பெருமாள் கருவறைக்குச் செல்ல இரண்டு வாயில்கள் உள்ளன. அவைகளுக்கு உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என்று பெயர் ஒவ்வோன்றும் 6 மாத காலத்திற்கு திறந்திருக்கும். கருவறை தேர் வடிவத்தில் நான்கு கல் சக்கரங்களுடன் காணப்படுகிறது. பெருமாள் இங்கு கிடந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்