நெய்வேண்டி நீரை விளக்கு நெய்யாகப் பெற்றவரது ஊர் என்ற காரணத்தினால் 'திருநெய்ப்பேறு' என்ற காரணப் பெயரால் தற்போது வழங்கப்படுகின்றது. இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் ஸ்ரீவன்மீக நாதர். அம்பிகையின் திருநாமம் உமா மகேஸ்வரி அம்பாள். நமிநந்தி அடிகள் நாயனார் இத்தலத்தில் தண்ணீரால் விளக்கேற்றிய பெருமையை தனது தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார். 1966ஆம் ஆண்டு நடந்த குட முழுக்கிற்குப்பிறகு தற்போது 2018 மார்ச் 3ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்வாலயம் திருவாரூரிலிருந்து திருத்துறைப் பூண்டி செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. படங்கள் உதவி: குருக்கள். தொடர்புக்கு: 94448 12040.