பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு இன்று காலை கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மகா தீப விழா கொடியேற்றப்பட்டது.