தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ராமசாமி ஆகியோருக்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் சிவகுமார், வடிவேலு, விவேக், நடிகைகள் லதா, வாணிஸ்ரீ, செம்மீன் ஷீலா, தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர். நாசர், விஷால், பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர்கள் நிர்வாகிகளும், பல்வேறு நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர்.