மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 45-வது அதிபர் ஆகிறார். 50 மாகாணங்களில் 270 தேர்வாளர் வாக்குகளை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில், டொனால்டு ட்ரம்ப் 279 தேர்வாளர் வாக்குகளை கைப்பற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் 218 பெற்றார்.