உரியில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இறுதி மரியாதை
காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா மாவட்டத்தில் உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 17 வீரர்கள் பலியாகினர். அவர்களின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதில் அரசியல் கட்சியினர், மத்திய அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.