பருவமழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து அணைகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் கடும் வறட்சியால் வறண்டு காய்ந்து விளையாட்டு மைதானமாக காணப்படுகிறது. இந்நிலையில் இதுவரை பலன் தந்த மரங்களும் பட்டுப்போகும் அவலம் தொடர்ந்துள்ளது. வறட்சியின் கொடுமையால் வேறு வழியின்றி விவசாயிகள் தோப்பில் உள்ள தென்னைகளை வெட்டி அகற்றி வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.