புதிய அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பின் வாங்கமாட்டேன், கட்சிப் பெயரை பின்னர் அறிவிப்பேன் என்று தனது 63வது பிறந்தநாளையொட்டி நடிகர் கமல்ஹாசன், மையம் விசில் என்கிற நற்பணி மன்ற செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தெரிவித்தார். மக்களின் மனதை அறிவதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாகவும் அறிவித்தார். கலைத்துறையில் ஒரே வருடத்தில் ஐந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் இவர் ஒருவரே. 2005-ம் ஆண்டு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவித்தது சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம். அதைதொடர்ந்து 1990ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2014ல் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது. முறையாக நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன்.