ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அவரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் அதிமுக தொண்டர்கள் மொட்டை அடித்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.