குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரபல ஆன்மிகவாதியும் ஈஷா யோக மைய நிறுவனருமான ஜக்கி வாசுதேவ், திரைப்பட பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், மிருதங்க வித்வான் டி.கே.மூர்த்தி, "பாரா ஒலிம்பிக்' தடகள வீரர் மாரியப்பன், பத்திரிகையாளர் சோ ராமசாமி (மரணத்துக்கு பிந்தைய விருது) உள்ளிட்ட சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.