உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, சுமார் 7,500 டன் எடை கொண்ட 'ஐ.என்.எஸ். சென்னை' போர்க்கப்பல் சென்னை துறைமுகம் வந்ததடைந்தது. இக்கப்பல் 164 மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலம், 18 மீட்டர் உயரம் கொண்டது. முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்ட இக்கப்பலில் இணைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கருவிகள், உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. போர்க்கப்பலை மாணவ - மாணவிகள் மலர்தூவியும், இசைக்கருவிகள் வாசித்தும் தேசியக் கொடியசைத்துவரவேற்றனர். இன்று மாலை முதல் பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.