கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி ஆதியோகி சிவன் திருமுகச் சிலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி கோவை வந்தார். பிரதமரின் கோவை வருகையை முன்னிட்டு விழா நடைபெறும் மையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழாவில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.