நாட்டின் 68 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தேசிய கொடி ஏற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். முப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள், காவல்துறையினர், மாணவர்களின் அணிவகுப்பு, தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் தொடர்பான அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு மாநிலங்களின் கலைஞர்கள் கலந்துகொள்ளும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிறகு வீரதீர செயலில் ஈடுபட்டோருக்கு அண்ணா விருதுகளை வழங்கினார் முதல்வர்.