சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, ஒற்றுமை ஆகியவற்றை பிரதிபலிக்கும் நோக்கில் இந்த மாரத்தான் ஓட்ட பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்று ஓடினர்.