இந்தியாவின் மொத்தச் சந்தையில் 29 சதவீதத்தை கையில் வைத்துவுள்ளது வெளிநாட்டு பானங்களை தயாரிக்கும் நிறுவனங்களான டயட் கோக், கோகோ கோலா, தம்ஸ் அப், ஸ்ப்ரைட், கின்லே போன்ற நிறுவனங்கள். இந்நிலையில் எத்தனை ஆயிரம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத விழிப்புணர்வை ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. வணிகர்கள் கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களை விற்க மாட்டோம் என அறிவித்துள்ள நிலையில், பெரும்பாலான கல்லூரி கேன்டீன்களும் கூட வெளிநாட்டு பானங்களை விற்க மாட்டோம் என அறிவித்துள்ளன.