விஜயதசமியையொட்டி கோயில்களில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகளுக்கு கோயில் பிரகாரத்தில் கொட்டப்பட்டிருந்த நெல்மணிகளில் எழுத வைக்கும் நடைமுறையும் நடைபெற்றது. குழந்தைகள் கல்வி சிறப்பதற்காக நாக்கில் தங்க ஊசியால் மந்திரங்கள் முழங்க எழுத்துகள் எழுதப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விஜயதசமி அன்று கையில் எடுக்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கை கல்வி, செய்தொழில் போன்ற சகல நிகழ்வுகளும் விஜயதசமி அன்று தொடங்கப்படுகிறது.