அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் 5வது நாளாக நீடிப்பதால், மின்சார ரயில், ஷேர் ஆட்டோவில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. மேலும் சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், கடற்கரை - செங்கல்பட்டு, கடற்கரை - வேளச்சேரி, ஆகிய வழித்தடங்களில் சென்னை புறநகர் ரயில் சேவையில் சிறப்பு ரயில்கள் நாளை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.