சமரசத்தை தடுப்பது பிரிட்டிஷ் சர்க்கார்

"பிரிட்டிஷ் சர்க்கார் ஒரே காரியம்தான் செய்யக்கூடும். அதாவது அவர்கள் நோக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டுவதே. அவர்கள் நோக்கத்தை மாற்றிக்கொள்வார்களா?
சமரசத்தை தடுப்பது பிரிட்டிஷ் சர்க்கார்

"பிரிட்டிஷ் சர்க்கார் ஒரே காரியம்தான் செய்யக்கூடும். அதாவது அவர்கள் நோக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டுவதே. அவர்கள் நோக்கத்தை மாற்றிக்கொள்வார்களா?
 பிரித்தாளும் கொள்கையாலேயே பிரிட்டிஷ் சர்க்கார் ஆளக்கூடும்.
 ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட்டு விடுமானால், அவ்வித ஒற்றுமை பிரிட்டிஷ் ஆட்சிக்கே உலையாகும். அதனால் பிரிட்டிஷ் ஆட்சியே மறையும். ஆகவே உண்மையான சமரசம் பிரிட்டிஷ் ஆட்சி முடிவதால் ஏற்படுமென்று எனக்கு தோன்றுகிறது.
 இந்தியாவின் பூரண சுதந்திரம் ஜீவனுள்ள வஸ்தாகும். பூசி மெழுகுவது பொருந்தவே பொருந்தாது. உலகம் முழுவதும் புனர் ஜென்மம் எடுக்கப் போகிறது. தாற்காலிகமாக அநுகூலத்திற்காகச் செய்யப்படும் எதுவும் கர்ப்பச் சிதைவு போலவேயாகும்.
 இந்தியாவிலுள்ள பல தலைகளும் ஒன்றோடொன்று இணைய முயன்று வருவது பூர்த்தியாக வேண்டுமானால் நான் காத்திருக்க வேண்டும். அது ஒரே நாளில் பூர்த்தியாகக்கூடிய காரியமல்ல. உரிய காலத்தில் இந்திய தலைகள் ஐக்கியப்பட்டே தீருமென்ற நம்பிக்கையுடன் சாக நான் விரும்புகிறேன்.
 எனது வாழ்க்கையே சமரசம் நிறைந்தது. லக்ஷியத்தை சமீபிக்கும்படி செய்த சமரசங்களே அவை. பாகிஸ்தான் அன்னியர் ஆதிக்கத்தை விட மோசமானதாக இருக்க முடியாது. மனமில்லாமலே நான் அன்னியர் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்து வருகிறேன். கடவுளின் சித்தமிருந்தால், எனது அவா (கனவு) எனது கற்பனை பாழாவதை நான் செய்வகையின்றி பார்த்துக் கொண்டிருக்கவே வேண்டும்.
 இந்தியாவை சிதைக்க முஸ்லிம்கள் உண்மையில் விரும்புகிறார்களென்று நான் நம்பவில்லை.''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com