மனப்பூர்வமாகச் செய்தால்தான் பலன்!

அஹிம்ஸையும், பலாத்காரமும் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி பின்வருமாறு எழுதியிருக்கிறார்:
மனப்பூர்வமாகச் செய்தால்தான் பலன்!

அஹிம்ஸையும், பலாத்காரமும் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி பின்வருமாறு எழுதியிருக்கிறார்:
சத்யத்தையும், அஹிம்ஸையையும் தேடி அலைபவன் என்ற முறையில், நம்முடைய செய்கைகள் ஹிருதய பூர்வமானவையாக இல்லாவிட்டால் நான் திருப்தியடையக் கூடாது. அந்த நாட்களில் நாம் கண்ட அஹிம்ஸை, நான் அடிக்கடி வியாக்யானம் செய்திருக்கும் அஹிம்ஸைக்கு மிகவும் குறைவானதென்பதை வீட்டுக்கூரைகளின் மீது நின்று நான் பறைசாற்ற வேண்டும்.
எந்தக் காரியத்தையும் நாம் மனப் பூர்வமாக செய்யாவிட்டால், விரும்பும் பலன் கிடைக்காது. பக்குவமடையாத நமது அஹிம்ஸையின் தோல்வி நன்றாகப் புலப்படுகிறது. ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கு மிடையே நடக்கும் சண்டையைப் பாருங்கள். ஒருவரோ டொருவர் யுத்தம் செய்வதற்கு ஆயத்தம் செய்து வருகிறார்கள். ஒத்துழையாமை காலத்தில் பாமர ஜனங்களிடையே மிகுந்த சக்தி வாய்ந்த ஊக்கத்தையும், உத்ஸாகத்தையும் சிருஷ்டித்தோம். ஒரு பொது லக்ஷியத்திற்காக அந்த சக்தி அடக்கி வைக்கப்பட்டிருந்தது. இப்போது அதற்கு தங்கு தடையில்லாமல் அவிழ்த்துவிட்டது போலாகி விட்டது. அது நம்மிடையேவும், நமக்கெதிராகவும் இப்போது உபயோகிக்கப்படுகிறது.
இப்போது நான் சொன்னவைகளிலிருந்து பலாத்கார கற்றுணர்ச்சி மிகவும் அதிகமாயிருக்கிறதென்பது நன்கு விளங்குகிறது. நிலைமை அடியோடு மாறுதலடைந்தாலொழிய, அஹிம்ஸை முறையில் சர்வஜன இயக்கம் ஆரம்பிப்பது அசாத்தியமென்பதையும் இது காட்டுகிற தென்று நம்புகிறேன்.
அஹிம்ஸையின் பெயரால், இப்போது ஒரு சர்வஜன இயக்கம் ஆரம்பித்தால், கடைசியில் அது பலாத்காரத்தில் போய் முடியும். சில சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடாகவும் பல சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடு இல்லாமலும் பலாத்காரத்தில் போய் முடியும். இதனால் காங்கிரஸுக்கு அவமான மேற்படும். காங்கிரஸின் சுதந்திரப் போராட்டத்திற்கு பாதக மேற்படும்.

தினமணி (08-07-1939)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com