திருமணமான 3 மாதத்தில் இளைஞர் மூளைச் சாவு: 6 உடலுறுப்புகள் தானம்

திருமணமான 3 மாதத்தில் இளைஞர் மூளைச் சாவு: 6 உடலுறுப்புகள் தானம்

திருமணமான மூன்றே மாதங்களில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரிடம் இருந்து 6 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.

திருமணமான மூன்றே மாதங்களில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரிடம் இருந்து 6 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பட்டறைத் தொழிலாளி ஆர்.ஜெயபிரகாஷ் (33). இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது. அவரது மனைவி பவானி முதுநிலை பட்டதாரி மாணவி.
இந்நிலையில், ஜெயப்பிரகாஷ் பணியாற்றி வந்த இடத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயங்களுடன் அவர் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலையில் முன்னேற்றமில்லாத நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி உறுதி செய்தனர்.
அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் முன்வந்தனர். இதனையடுத்து அவரது இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் ஆகிய ஆறு உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.
கல்லீரல் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த 54 வயது தொழிலதிபருக்கும், ஒரு சிறுநீரகம் நெய்வேலியைச் சேர்ந்த 55 வயதான ஆணுக்கும் பொருத்தப்பட்டது. கண்கள் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் சேமிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சீறுநீரகம் மற்றும் இதயம் சென்னையில் உள்ள வேறு தனியார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com