பல் ஈறுகளைத் தாக்கக் கூடிய நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்களாலும் கூட உணவுக்குழாய் கேன்சர் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரிக்கலாம் என சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இவ்வகையில் தோன்றக் கூடிய கேன்சரானது அதன் துவக்க கட்டத்தில் கேன்சருக்கான அறிகுறிகள் எதையும் காட்டுவதே இல்லை. குறைந்த பட்சம் இவ்வகை கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களில் 15% முதல் 25% நோயாளிகளுக்கு 5 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருக்கு உத்திரவாதமுண்டு என்கிறது இந்த ஆய்வு. இந்த ஆய்வின் முதன்மையான நோக்கம் கேன்சரைப் பற்றிச் சொல்லி பயமுறுத்துவது இல்லை. பற்களை சுத்தமாகப் பராமரிப்பதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை மேம்படுத்துவது மட்டுமே இதன் குறிக்கோள் என்கிறது இந்த மருத்துவ ஆய்வின் அடுத்த கட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர் குழு.
மனித உடல் உறுப்புகளின் மிக எளிதாக பாக்டீரியாத் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய உறுப்புகளில் முதன்மையானவை பற்களே.
பற்களின் வழியாக பரவக்கூடிய உணவுக்குழாய் கேன்சரானது இளைஞர்களைக் காட்டிலும் முதியவர்களையே உடனடியாகத் தாக்கவல்லது, எனினும் இந்த நோய்த்தொற்றுக்கும் வயது பாகுபாடுகள் இன்று பலியானவர்களில் சிறூகுழந்தைகள் முதல் நடுத்தர வயதுள்ளவர்கள், முதியவர்கள் என அனைவருமே அடங்குவர்.
எனவே சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பற்களில் ஏதேனும் பிரச்னைகள் எனில் அவற்றைத் தட்டிக் கழிக்காமலும், தவிர்க்க நினைக்காமலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம் என்பதை உணர வேண்டும். அது மட்டுமல்ல, தினமும் இருமுறை பற்களை சுத்தம் செய்ய மறக்கக் கூடாது. குழந்தைகளுக்கும் இளமை முதலே இந்தப் பழக்கத்தை உருவாக்கித் தொடரச் செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை என்பதை மறக்கக் கூடாது.
பல் ஈறுகளை பாக்டீரியாத் தொற்று வரக் காரணம்...
பச்சை காப்பிக் கொட்டை 'B' குரூப் ரத்தத்தை 'O' குரூப்பாக மாற்றுமா?
பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தியாக வளரணுமா? இதோ வெங்காயச் சாறு மருந்து!
உங்களுக்கு இதய நோய் உள்ளதா? தெரிந்து கொள்ள குனிந்து கால் விரலைத் தொட்டு பாருங்கள்!
குறட்டை விடுவதை நிறுத்த வேண்டுமா? இதைச் செய்தால் போதும்
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டிற்குள் இருமடங்காக அதிகரிக்கும் அபாயம்!