சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவமனையில் வாய் புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வாயில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டறியும் இலவச முகாம் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவமனை, மருத்துவமனை வளாகத்தில் வரும் மே 31 (புதன்கிழமை), ஜூன் 1 (வியாழக்கிழமை) ஆகிய நாள்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்துகிறது.
வாயில் நாள்பட்ட புண், சாப்பிடும் போது எரிச்சல், சதை வளர்ச்சி மற்றும் வீக்கம், நாள்பட்ட வெண்ணிறப்படை உள்ளவர்களும், புகை பிடிப்பவர்கள், புகையிலை, பான் மசாலா, பாக்கு மெல்லும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த முகாமில் இலவசப் பரிசோதனைகள் செய்யப்படும்.
அடிப்படை ரத்த மற்றும் சதை பரிசோதனை, தாடை எக்ஸ்ரே போன்றவை இலவசமாகவும், தாடை ஸ்கேன் மற்றும் அறுவை சிகிச்சை சலுகைக் கட்டணத்திலும் செய்யப்படும். ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் வாய்நோய் அறிதல் மற்றும் கதிரியக்கத்துறை இந்த இலவச முகாமை நடத்துகிறது.