நம்மில் பலர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது முடி கொட்டிவிடும் என்கிற பயத்தில் தலைக்கவசம் அணிவதையே தவிர்ப்போம், ஆனால் முடி அடர்த்தியாக வளர்ந்து, உதிர்வைத் தடுக்க இயற்கை வைத்தியத்திலேயே பல வழிகள் இருப்பது நமக்குத் தெரிவதில்லை. உங்கள் முடி உதிர்வு பிரச்னையை சில மாதங்களிலேயே நிருத்தி மேலும் அடர்த்தியான முடியைப் பெற ஒரு அர்ப்புதமான வழியைச் சொல்ல போகிறேன், அதனால் இனி எந்தவொரு பயமும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது உங்களின் உயிர் காப்பான் ஆன தலைக்கவசத்தை கட்டாயம் அணிந்து செல்லுங்கள்.
ஆண், பெண் என யாராக இருந்தாலும் அடர்த்தியான முடி என்பது எப்போதும் ஒரு கூடுதல் அழகு தான். ஆனால் சுற்றுச்சுழல் மாசு, மன அழுத்தம், தினமும் தலையில் எண்ணெய் வைக்காமல் இருப்பது மற்றும் பல கெமிக்கல்களை தலையில் போடுவது போன்றவற்றால் பல பிரச்னைகள் வருகின்றன, உதாரணத்திற்கு முடி உதிர்வு, அடர்த்தி குறைவது, பொடுகு தொல்லை, இள நரை, வழுக்கை விழுவது என. இந்த அனைத்து பிரச்னைக்கும் ஒரே தீர்வாக உங்கள் சமையலறையில் எப்போதும் கிடைக்கும் வெங்காயத்தைப் பயன்படுத்தினால் போதும்.
3 வகையான வெங்காய சாறு தயாரிக்கும் முறை:
1. முடி அடர்த்தியாக வளர:
2. பொடுகு தொல்லை தீர:
3. முடி உதிர்வைத் தடுக்க:
நாம் உபயோகிக்கும் ஷாம்புவில் இருக்கும் கெமிக்கல் கலவைகளாலேயே முடி உதிர்வு ஏற்படுகிறது, எனவே இந்த வெங்காய கலவையைத் தயாரித்து ஷாம்பு போட்டு குளித்த பின்னர் இதை வைத்து தலையை அலசவும்.
டிப்ஸ்: உங்கள் தலையில் வெங்காய சாற்றின் வாடை வருவதைத் தவிர்க்க உங்களுக்குப் பிடித்த ரோஜா, லேவண்டர், ஆரெஞ் எண்ணெய்யை அதனுடன் சேர்த்து கொள்வது வாடையைத் தடுக்கும்.
பொதுவாகவே முடி உதிர்வு ஏற்படுவதற்குப் பாக்டீரியா அல்லது புஞ்சை தொற்றே காரணமாக இருக்கும், வெங்காயத்தில் இருக்கும் சல்ஃபர் கலவை ஒரு நல்ல கிருமி நாசினியாக செயல்படக் கூடிய ஒன்று. வெங்காயச் சாற்றில் இயற்கையாகவே இருக்கும் இந்தக் கலவை முடி நரைத்தலைத் தடுத்து சாறு நேரடியாகவே முடியின் வேர் கால்களை சென்றடையச் செய்கிறது.