அறிகுறிகள் : நம் உடலில் அரிப்பு உண்டானால் கிருமிகளின் தாக்கம் உள்ளது என்று பொருள். கிருமிகள் இல்லாமல் ஒருவருக்கு உடம்பில் அரிப்பு வராது.உடலில் சேரும் நுண்ணுயிர்கள் மூலமாகத் தான் உடலில் ஏற்படும்.அந்த நுண்ணுயிர்கள் மூலம் உண்டாகும் மூக்கில் ஏற்படும் அரிப்பு, வாயில் மஞ்சள் பூச்சு மற்றும் நாக்கில் உண்டாகும் மஞ்சள் பூச்சு, பற்களில் உண்டாகும் மஞ்சள் பூச்சு ஆகியவற்றிலிருந்து விடுபட
மண்டலம் - சுவாச மண்டலம்
காய் - முருங்கை
பஞ்சபூதம் - காற்று
மாதம் - ஐப்பசி
குணம் - பணிவு
ராசி /லக்கினம் - துலாம்
சத்துக்கள் : நார்ச் சத்து , புரதச் சத்து , சுண்ணாம்புச் சத்து , இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.
தீர்வு : முற்றின முருங்கை விதை(5) ,ஒரு பீர்க்கங்காய் ( தோல் , சதை , விதை ) நன்றாக கழுவி நறுக்கி இரண்டையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை அரை டம்ளர் வீதம் குடித்து வரவும்.
வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com