தினமும் தூங்கி எழுந்த பிறகோ அல்லது ஒவ்வொரு முறையும் உணவு உண்ட அடுத்த 1 மணி நேரத்திற்கு பிறகு வாயில் துர்நாற்றம் ஏற்பட நேரும். அதை தடுக்க, இதை செய்து பாருங்கள்:
எலுமிச்சம், ஆரஞ்சு, புதினா இவைகளில் ஏதேனும் ஒன்று எடுத்து சாப்பிட்டு வாய் கொப்புளிக்க துர்நாற்றம் போய்விடும்.
உப்பு தண்ணீரில் வாய் கொப்புளிக்க துர்நாற்றம் போய்விடும். தேங்காய் எண்ணெய்யைச் சிறிது எடுத்து வாயில் ஊற்றி 5நிமிடம் கழித்து உமிழ்ந்துவிட வேண்டும். இப்படி செய்து வர கிருமிகள் அண்டாதாம். பழங்களை அடிக்கடி சாப்பிட்டுவர இந்தப் பிரச்னையில் இருந்து விரைவில் நிவாரனம் கிடைக்கும்.
- பொ.பாலாஜிகணேஷ்