35. குழந்தைகள் நலத்திற்கு ஹோமியோபதி

என்றொரு பழைய திரைப்படப் பாடல் உண்டு. ஆம். இல்லறத் தோட்டத்தில் அரும்பு மலரும்
35. குழந்தைகள் நலத்திற்கு ஹோமியோபதி

‘சின்ன அரும்பு மலரும்

சிரிப்பை சிந்தி வளரும்

கண்ணில் அந்தக் காட்சி கண்டு

களிக்கும் நாள் வரும்’

என்றொரு பழைய திரைப்படப் பாடல் உண்டு. ஆம். இல்லறத் தோட்டத்தில் அரும்பு மலரும் தருணம் குடும்பத்தினரை குதூகலத்தில் ஆழ்த்தும் இணையற்ற இனிய தருணம். குறளமுது கூறுவது போல் மழலைச் சொல் கேளாதவர்கள் தான் குழலினிது யாழினிது என்பார்கள்.

ஆரோக்கியமான குழந்தை பிறப்பும், குழந்தை வளர்ப்பும் ஆரோக்கிய தேசத்தைக் கட்டமைக்கும். ஆரோக்கியமான குழந்தை உருவாக்கும் கடமை கருவிலிருக்கும் போதே துவங்கி விடுகிறது. அந்தப் புனிதப் பணியில் ஹோமியோபதி மருத்துவம் பக்கவிளைவு இல்லாமல் பெருந்துணை புரிகிறது. கர்ப்ப காலத்தில் தாய் சோரினம், டியூபர்குலினம், சிபிலினம் போன்ற சில ஹோமியோபதி மருந்துகளை மருத்துவம் ஆலோசனையுடன் எடுத்துக் கொண்டால் கருவிலேயே குழந்தைக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகும். இயற்கைப் பிரசவத்திற்கும் உதவும் ஹோமியோபதி மருந்துகளும் உள்ளன.

தாய்ப்பாலின் அவசியத்தை இன்றைய காலக்கட்டத்தில் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது. தாய்ப்பால் என்பது குழந்தையின் அடிப்படை உரிமையாகும். ஆயினும் சில குழந்தைகள் தாய்ப்பாலை வெறுக்கும், மறுக்கும், இந்நிலையை மாற்ற ‘கல்கேரியா பாஸ்’ பயன்படும். சில குழந்தைகளுக்கு தாய்ப்பாலே ஒத்துக் கொள்ளாத நிலை இருக்கும். இதற்கு ‘சிலிகா’ பயன்படும்.

சில குழந்தைகளுக்கு சாதாரணமாகக் கொடுக்கப்படும் பால் ஒத்துக் கொள்ளாமல் வாந்திபேதி உண்டாகக் கூடும். இதற்கு ‘ஏதுசா’, கல்கேரியா கார்ப்’ ‘புரோமியம்’ போன்ற மருந்துகள் நற்பயன் நல்கும். பல் முளைக்கும் காலங்களில் உண்டாகும் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சுரத்திற்கு ‘சாமோமில்லா’, ‘கல்கேரியா கார்ப்’ சிறந்தவை.

பிறந்த காலம் முதலே சில குழந்தைகள் மலச்சிக்கலால் அவதிப்படக் கூடும். சரியான அளவு பாலும், நீரும் உணவுகளும் கொடுத்த பிறகும் கூட மலச்சிக்கல் நீடிக்கும். இதற்கு ‘நக்ஸ்வாமிகா’ நல்லது. டின்களிலுள்ள பால்பவுடர் உணவுகளால் ஏற்படும் மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு தரும் மருந்து ‘அலுமினா’. சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தையின் மலச்சிக்கலுக்கு ‘ஓபியம்’ அற்புத நிவாரணியாகும்.

குழந்தைகளின் முக்கிய பிரச்னைகளில் ஒன்று பசியின்மை. பிறந்த சில மாதங்கள் ஆன குழந்தை சரியாகப் பால் குடிக்காது. இதற்கான காரணங்களில் ஒன்று வாய்ப்புண். வாய்ப்புண் ஆற்றும் இனிய மருந்து ‘போராக்ஸ்’ மற்றொரு முக்கியப் பிரச்னை வயிற்று உப்புசம். இதற்கு ‘நக்ஸ்வாமிகா’ லைகோபோடியம் உதவும். குடற்கிருமிகள் காரணமாகவும் பசியின்மை ஏற்படலாம். இதனால் சிறுநீர்க் கோளாறுகளும் ஏற்படக் கூடும். ‘சல்பர்’ ‘நேட்ரம் பாஸ்’, ‘ஸ்பைஜீலியா’, ‘சீனா’ போன்ற மருந்துகள் சீர்படுத்தும்.

இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் குழந்தைகளை அதிகளவு பாதிக்கும் முக்கிய நோய்களில் ஒன்று Primary எனப்படும் இளம்பிள்ளை காசம், இந்நோயினை ‘அப்ரோடனம்’ நேட்ரம்சல்ப், டியூபர்குலினம் போன்ற ஹோமியோ மருந்துகள் மூலம் முழுமையாகக் குணப்படுத்த முடியும். பால், முட்டை, பருப்பு வகைகள், மீன், கோழி முதலிய இறைச்சி வகைகள் அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

சில குழந்தைகளுக்கு அடிக்கடி சுரம், சளி, இருமல், தொண்டை வலி, தோல் நோய்கள் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பது தான் பிரதான காரணம். ஆர்ஸ் ஆல்ப், மெர்க் சால், பாரிடா கார்ப், அக்ராபிஸ் நூட்டன்ஸ், சோரினம், மெடோரினம் போன்ற மருந்துகள் நோயினை தீவிரத்தைக் குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பெருக்கி குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

குழந்தைகளுக்கு ஆபரேஷன் தேவை என்று ஆங்கில மருத்துவத்தால் அறிவுறுத்தப்படும் டான்சிலைட்டிஸ், நாக்கிற்கு அடியிலும், கண்ணிலும் வரும் நீர்க்கட்டிகள், அடினாய்டு, மூக்குச் சதை வளர்ச்சி போன்றவற்றிற்கு ஹோமியோபதியில் கல்கேரியா, லைசினம், நைட்ரிக் ஆசிட் போன்ற மருந்துகள் மூலம் ஆபரேஷன் இல்லாமல் முழுமையாகக் குணமடையலாம். இந்நோய்கள் மீண்டும் வராமல் முழுநலம் கிடைக்கும்.

சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படாத டான்சிலைட்டிஸ் நோய் பிற்காலத்தில் மூட்டுகளைத் தாக்கி, ருமாட்டிக் ஆர்த்ரைடிஸ் என்ற மோசமான நோயையும் இதய வால்வுகளை பாதித்து மிட்ரல் ஸ்டெனோசிஸ் என்ற இதய நோயையும் ஏற்படுத்தி விடும். இந்த நிலைகளில் பாரிடாகார்ப், மெர்க்சால் ஸ்ட்ரெப்டோகாக்சினம் போன்ற மருந்துகளைத் தந்து டான்சிலைட்டிஸ் நோயையும் அதன் பின் விளைவுகளையும் குணப்படுத்தி முழு ஆரோக்கியம் அளிக்க முடியும்

மேலும் சிசுப்பருவம் முதல் பதின்பருவம் அடையும் வரை சிறுவர் சிறுமியரின் பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்களின் ஏற்படும் கோளாறுகளையும் சீரமைத்து ஹோமியோபதி மருத்துவம் உறுதுணையாகத் திகழ்கிறது.

எதிர்கால சந்ததியினர் நோயற்ற வாழ்க்கையை வாழ்வதன் மூலம் நலமான பிரஜைகளைக் கொண்ட, வலிமையு, வளமும் நிறைந்த இந்தியாவை உருவாக்க முடியும்.

Dr.S. வெங்கடாசலம்

மாற்று மருத்துவ நிபுணர்

சாத்தூர்,

செல் – 94431 45700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com