ஆசனவாய் நோய்கள் அலட்சியம் வேண்டாம்!

முக அழகிற்கும், முடி அலங்காரத்திற்கும் தினமும் கவனம் செலுத்துபவர்கள் ஆசனவாய்
ஆசனவாய் நோய்கள் அலட்சியம் வேண்டாம்!

முக அழகிற்கும், முடி அலங்காரத்திற்கும் தினமும் கவனம் செலுத்துபவர்கள் ஆசனவாய் சார்ந்த நோய்களான மலச்சிக்கல், மூலம், பவுத்திரம், சதைகள், கட்டிகள், வெடிப்புகள் ரத்தப்போக்கு ஆகியவை குறித்து அக்கறை செலுத்துவதில்லை. காரணம் கூச்சத்தினாலும், அச்சத்தினாலும் ஏற்படும் தயக்கம். ‘அறுவை சிகிச்சை அவசியம்’ என்று மருத்துவர்கள் சொல்லி விடுவார்களோ என்றுபயத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டே போய், நோயை முற்றிய நிலைச் சிக்கலாக வளர்த்து விடுகிறார்கள். ஆசனவாய் நோய்களுக்கான ஆரம்ப அறிகுறீகள் தெரிந்தவுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நலமாக்கல் எளிது.

ஆசனவாயும், மலக்குடலும் இருபுட்டங்களுக்கு நடுவில், பாலுறுப்புகளுக்கு அருகாமையில் மறைவாக அமைந்துள்ளன. சுற்றியுள்ள கொழுப்பு திசுக்களால் ஆசனவாய் பாதுகாப்பாக உள்ளது. மலமும் வாயுவும் வெளியேறும் போது மட்டும் விரிந்து மற்ற நேரங்களில் இறுக்கமாகச் சுருங்கியிருக்கும் தன்மையுள்ள சுருங்கு தசைகள் (sphincters) இங்கு உள்ளன. ஆசனவாயில் நடைபெறும் ஆபரேஷன்களை எளிய, சிறிய (Minor Surgeris) ஆபரேஷன்கள் என்றே ஆங்கில மருத்துவம் கூறுகிறது. ஆயினும் மைனர் ஆபரேஷனுக்குப் பின் பேரிய பின் விளைவுகள் (Major side effects) ஏற்படுவதை முதலில் கூறுவதில்லை.

ஆபரேஷனுக்குப் பின்பு ஆசனவாய் சுருங்குதசைகள் (Sphincter Muscles) பாதிக்கப்பட்டு மலத்தை அடக்கிக் கொள்ளும் தன்மையை இழந்துவிடுகிறது (Incontinence). சிலருக்கு மலக்குடல் அடைப்பு (Stricture) ஏற்பட்டு விடுகிறது.

மூலம் (Piles), பவுத்திரம் (Fistula in Ano), பவுத்திர சீழ்க்கட்டி (Perianal Abscess), பிளவுப் புண் (Fissure in Ano), ஆசனவாய் நமைச்சல் அரிப்பு (Anal Pruritus), தொங்குசதைக் கட்டி (Anal Polyp), மலக்குடல் & ஆசனவாய் பிதுக்கம் (Anal & Rector Prolapse), ரத்தப்போக்கு போன்றவை ஆசனவாய் சார்ந்த பொதுவான நோய்களாகும். ஆயினும் இவற்றில் எந்த நோய் ஏற்பட்டாலும் ‘எனக்கு பைல்ஸ் உள்ளது’ என்று தான் பலரும் மருத்துவர்களிடம் தெரிவிப்பதுண்டு. தீர விசாரித்தும், உடற்பரிசோதனை செய்தும், தேவையெனில் ஆய்வுக் கூட பரிசோதனைகளுக்கு உட்படுத்தியும் நோயையும், நோய் நிலையையும் மருத்துவர்கள் கண்டறிந்து உறுதி செய்த பின்னரே சிகிச்சை அளிக்கின்றனர்.

‘மூலம்’ என்ற நோய் தவிர்த்து பிற முக்கிய ஆசனவாய் நோய்களையும் அவற்றை நலமாக்கப் பயன்படும் ஹோமியோபதி மருந்துகள் பற்றியும் பார்ப்போம். (மூலம் தனி கட்டுரையாக விரிவாக எழுதப்பட வேண்டிய ஒன்று).

ஆசனவாய் பிளவுகள் (fissures in Ano) : மலங்கழித்தல் என்பது இயல்பான, சிரமமற்ற உடலியல் நிகழ்வாக நடைபெற வேண்டும். மாறாக மிகக் கடினமான, வேதனை மிக்க நிலை மலங்கழிக்கும் போது ஏற்பட்டால் ஆசனவாய் பகுதி காயம்பட்டு விடும். மலச்சிக்கல் பேர்வழிகளுக்கு மலப்பாதை வழியே மிகக் கடினமான இறுக்கமான மலம் சிரமப்பட்டு வெளியேறுவதன் விளைவே ஆசனவாய் பிளவுப் புண்கள் (Cracks). இது ஆசனவாய் கிழிந்து விடும் நிலையாகும் (Tear in Anus). பிறப்புறுப்பு வழியே பிரவசிக்கும் (Vaginal Delivery) பெண்களுக்கும் ஆசனவாயில் ஏற்படும் அழுத்தங்களால் பிளவுப் புண்கள் ஏற்படக் கூடும்.

ஆசனவாய்ப் பிளவுப் புண்கள் இருப்பதற்கான முக்கிய அறிகுறி

மலங்கழிக்கும் போதும், சிலருக்கு மலம் கழித்த பின்னரும் ஆசனவாயில் கடும்வலி ஏற்படும். இந்நோயைப் பலரும் மூலம் (Piles) என்றே கருதி சிகிச்சைக்கு வருவதுண்டு. இந்நோய் தீவிர (acute) வலியுள்ள வகை. நாள்பட்ட (acute) வலியுள்ள வகை எனப் பிரிக்கப்படுகிறது. நாள்பட்ட வகையில், ஆசனவாயில் முக்கோண வடிவமுள்ள தோல் தொங்கும். இதை Sentinal Pile என்று அழைத்த போதிலும் இது மூல நோய் அல்ல.

தீவிர மற்றும் நாள்பட்ட ஆசனவாய் பிளவுப் புண்களுக்கு ஆபரேஷன் இன்றி, பக்க விளைவுகள் இன்றி ஹோமியோபதி மருந்துகள் எளிய முறையில் தீர்வு தருகின்றன. ஹோமியோபதி மருந்துகள் மனித உடலின் சீர்குலைந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. கடுகளவு தீங்கு கூட ஏற்படுவதில்லை. மிகவும் பாதுகாப்பானவை.

நைட்ரிக் ஆசிட் (Nitric Acid) என்ற ஹோமியோபதி மருந்து ஆசனவாய் பிளவுப் புண்களுக்கு ஆபரேஷனின்றி, பக்க விளைவுகளின்றி ஹோமியோபதி மருந்துகள் எளிய முறையில் தீர்வு தருகின்றன. ஹோமியோபதி மருந்துகள் மனித உடலின் சீர்குலைந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. கடுகளவு தீங்கு கூட ஏற்படுவதில்லை, மிகவும் பாதுகாப்பானவை.

நைட்டிரிக் ஆசிட் (Nitric Acid) என்ற ஹோமியோஒபதி மருந்து ஆசனவாய் பிளவுப் புண்களுக்கு அற்புத நலமளிக்கும் திறன் கொண்டது. ஆசனவாயில் கிழிபடுகிற, குத்துகிற, கொட்டுவது போன்ற, வெட்டுவது போன்ற வலி ஆசனவாயில் ஏற்படுமாயின் இம்மருந்து பேருதவி புரிவது திண்ணம். மேலும் கடினமலம், மலத்துடன் ரத்தப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கும் உடனடித் தீர்வு கிட்டும்.

ரட்டானியா (Ratanhia) என்ற ஹோமியோ மருந்தும் ஆசனவாய் பிளவு நோயில் சிறந்த நிவாரணமளிக்கக் கூடியதாக திகழ்கிறது. மலம் கழித்த பின் மலப்பாதையில் & ஆசனவாயில் அதிகளவு எரிச்சல் உணர்வும் நீண்ட நேரம் நீடிக்கக் கூடிய வலியும் காணப்படும். ஆசனவாய் வாய் வழியாக மலக்குடலுக்குள் ஒரு கத்தியையோ, உடைந்த கண்ணாடித் துண்டையோ கொண்டு செருகியது போல் வலிப்பதாக நோயாளி விவரிப்பார். ஆசனவாய் மிகவும் இறுகிவிட்டது போல (Constricted) இளகிய மலத்தைக் கூட மிகவும் சிரமப்பட்டு வெளியேற்றும் நிலை ஏற்படும். இத்தகைய நிலையில் ரட்டானியா அற்புதங்கள் நிகழ்த்தும் என்பதை ஒவ்வொரு ஹோமியோபதி மருத்துவரும் அறிவார்கள்.

இவ்விரண்டு மருந்துகள் தவிர சல்பர், பேயோனியா, கிராபைட்டீஸ், தூஜா, இக்னேஷியா, Sedun Acre போன்ற சில மருந்துகளும் ஆசனவாய் பிளவுப் புண்களை முழுமையாகக் குணப்படுத்தும் முன்னணி மருந்துகளாகத் திகழ்கின்றன.

ஆசனவாய் அரிப்பு, நமைச்சல் (PRURITUS ANO) : ஆசனவாயைச் சுற்றித் தாங்க முடியாத அரிப்பு (Itching) ஏற்படுவதை தான் PRURITUS ANO என்கிறோம். பொது இடத்தில் இருக்கும் போது கூட ஒரு நபர் ஆசனவாயில் கை வைத்து தேய்த்துக் கொள்ளும் அளவுக்கு அரிப்பு இருக்கும். இதைக் காணும் பிறருக்கு அருவருப்பாக இருக்கும். ஆசனவாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கும், குடற்பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தான் இத்தகைய ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. வயிற்றுப் பூச்சிகளால் பெரும்பாலும் குழந்தைகள் தான் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சல்பர், நைட்ரிக் ஆசிட், காஸ்டிகம், லைகோ, சபடில்லா போன்ற ஹோமியோபதி மருந்துகள் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகின்றன.

தொங்குசதை (POLYP) : மலக்குடலினுள்ளும் சில சமயம் ஆசனவாயின் வெளியேயும் தெரியும் தொங்குசதை POLYP எனப்படுகிறது. சிவப்பான ரத்தம் கசியும் சதை இது. ஆங்கில மருத்துவத்தில் இதனை POLYPECTOMY எனும் சிகிச்சை மூலம் அகற்றுகின்றனர். சிலருக்கு ஒன்றுக்கு மேல் இச்சதை இருந்தால் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இச்சதையை அறுவைச் சிகிச்சையின்றி குணமாக்க உதவும் சில முக்கிய ஹோமியோ மருந்துகள் : டுக்ரியம், பாஸ்பரஸ், தூஜா, காலிபுரோம்.

மலக்குடல் பிதுக்கம் (PROLAPSE RECTUM) : மலம் கழிக்கும் போது, மலக்குடல் முழுவதும் ஆசனவாய் வழியாக வெளியே தள்ளப்பட்டு பிதுங்கித் தொங்கும். இந்தச் சதை 3 அல்லது 4 அங்கும் நீளத்திற்குத் தொங்கும். இச்சதை பார்ப்பதற்கு அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தும். சிறு குழந்தைகளும், முதியவர்களும் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள். சிறுவயதில் வரும் இந்நோய் தானாகவே குணமாவதுண்டு. பெரியவர்களுக்கு வந்தால் மலக்குடலை உள்ளே தள்ளி நிலைநிறுத்தும் RECTOPEXY அறுவைச் சிகிச்சை ஆங்கில மருத்துவத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ஹோமியோபதியில் அறுவைச் சிகிச்சை தேவையில்லை ஆலோ, இக்னேசியா, மூரியாடிக் ஆசிட், போடோ பைலம், ரூடா, அபிஸ், கல்கேரியா கார்ப், சிலிகா, செபியா, மெர்க்சால் போன்ற ஹோமியோபதி மருந்துகள் மலக்குடல் இறக்கத்திற்கு முழு நிவாரணம் அளிக்கின்றன. கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலக்குடல் இறக்கத்திற்கு போடோபைலம், ரூடா ஆகிய இருமருந்துகள் அற்புதமாக பயன் தருகின்றன.

ஆசனவாய் நோய்களுக்கு ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவங்களில் மிகச் சிறந்த தீர்வுகள் கிடைக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ரத்தப்போக்கை உடனடியாக கட்டுப்படுத்த, கடுமையான வலியிலிருந்து விரைவாக நிவாரணம் கிடைக்க, பின் விளைவுகள் நிறைந்த அறுவைச் சிகிச்சைகளைத் தவிர்க்க ஹோமியோபதி உள்ளிட்ட மாற்றுமருத்துவங்களே மிகவும் சிறந்தவை.

Dr.S. வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

Cell : 9443145700

Mail : alltmed@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com