புது தில்லி: இந்தியாவில் முக்கால்வாசி இந்தியர்கள், தனியார் மருத்துவமனைகளையே நாடுவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
'இந்தியாவின் சுகாதாரம் மற்றும் நோய்தன்மை: 2004 - 2014' என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியாவில் வாழும் 75 சதவீத புற நோயாளிகள், தனியார் மருத்துவமனைகளையே நாடுவதாகக் கூறுகிறது.
உள்நோயாளிகள் பிரிவில் 55 சதவீதம் மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
நோய் காரணமாக தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் மக்கள் தங்களது பாக்கெட்டில் இருந்து மருத்துவருக்கான கட்டணம், மருந்து, சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தும் தொகையும் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.