புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்!

புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்!

புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புதிய ரூ.100 நோட்டுகளை விரைவில் புழக்கத்தில் விடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய ரூபாய் நோட்டுகளில் இருப்பதைப் போலவே புதிய ரூ.100 நோட்டுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருக்கும்.
அதேபோல், நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டாக குறிப்பிடப்பட்டிருக்கும் 2016 என்ற எண் வரிசையும், பழைய நோட்டுகளில் இருக்கும் எண்களின் அளவையே ஒத்திருக்கும்.
அதேநேரத்தில், புதிய நோட்டுகளில் அச்சிடப்பட்டிருக்கும் மற்ற எண்களும், அடையாளக் குறியீடுகளும் சற்று பெரிய அளவில் குறிக்கப்பட்டிருக்கும். இந்த நோட்டுகளில் வரிசைக் கோடுகள் ஏதும் இடம்பெற்றிருக்காது.
பழைய ரூபாய் நோட்டுகளுடனேயே இந்த புதிய ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புதிய ரூ.20, ரூ.50 நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com