பாட்னா: பிகார் மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தில், கணவரை விட்டு தனியாக வசித்து வந்த இளநிலை பெண் பொறியாளர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
முசாஃபர்நகர் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த சரிதா தேவி என்ற பெண்ணை, மர்ம நபர்கள் நாற்காலியில் கட்டிவைத்து மண்ணெண்னை ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தில் அப்பெண் பலியானார். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக முசாஃபர்நகர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.