புது தில்லி: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 6,000 கன அடி நீரை இன்று முதல் மூன்று நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இன்று பெங்களூருவில் முதல்வர் சித்தராமைய்யா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்து ஒருமனமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தில்லியில் நாளை நடைபெற உள்ள இருமாநில அதிகாரிகள் சந்திப்பிற்குப் பிறகே தண்ணீர் திறக்கப்படும் என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.