புது தில்லி: காவிரி விவகாரம் தொடர்பாக தில்லியில் மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு நீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
நீர் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா கோரினார்.
எனினும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.