கர்நாடக மாநில இடைத்தேர்தல்: இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி

கர்நாடக மாநில இடைத்தேர்தலில் இரு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

கர்நாடக மாநில இடைத்தேர்தலில் இரு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தில் நஞ்சன்கூடு, சாமராஜ்நகர் மாவட்டத்தில் குண்டல்பேட் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்றது. இவ்விரு தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில் இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 

நஞ்சன்கூடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் என்.கேசவமூர்த்தி 21,334 வாக்குகள் வித்தியாசத்திலும், குண்டல்பேட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கீதா மகாதேவ பிரசாத் 10,877 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இடைத் தேர்தல் முடிவுகள் முதல்வர் சித்தராமையா மற்றும் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com