சூரத்: குஜராத்தில் 2-ம் நாளாக இன்று சுற்றுப் பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பன்னோக்கு மருத்துவமனை மற்றும் வைரம் உற்பத்தி நிறுவனத்தை திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஒடிசா பயணத்தை முடித்துக் கொண்டு குஜராத் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், 2-வது நாளான இன்று சூரத் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பன்னோக்கு மருத்துவமனையை இன்று காலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சில திட்டங்கள் மூலம் மருந்து மற்றும் சிகிச்சை தொடர்பான உபகரணங்களின் விலை குறைக்கப்பட்டிருப்பதால், பெரும்பாலான மருந்து நிறுவனங்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து, சூரத் நகரில் அமைக்கப்பட்டுள்ள வைர உற்பத்தி நிறுவனத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.