உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ரூ.30 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாகவும், மேலும் இந்த விவகாரத்தில் தமிழக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு பதிவு செய்ய மறுப்பதாகவும் கட்டட ஒப்பந்ததாரர் எஸ்விஎஸ் குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அமைச்சர் காமராஜுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.