சர்வதேச பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதி அபு துஜானா இந்திய ராணுவத்தால் செவ்வாய்கிழமை சுட்டு வீழ்த்தப்ப்ட்டான்.
இதனை உறுதி செய்த ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, ட்விட்டரில் கூறியதாவது:
பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதி அபு துஜானா, ஹக்ரிபூரா புல்வாமா என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டான். இது இந்திய பாதுகாப்புப் படைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்றனர்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தேடப்படும் முக்கியமான 12 பயங்கரவாதிகளின் விவரத்தை இந்திய ராணுவம் வெளியிட்டது. அதில், அபு துஜானாவும் இடம்பெற்றுள்ளான்.
2017-ம் ஆண்டில் இதுவரை மட்டும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் 95 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. அதில் இதுபோன்ற குறிப்பிட்ட முக்கிய பயங்கரவாதிகளும் அடங்குவர்.