மத்திய அமைச்சர் விஜய் கோயல் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், நுரையீரல் தொற்று காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
மத்திய அமைச்சர் விஜய் கோயல் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், நுரையீரல் தொற்று காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடுமையான காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகளுடன் எய்ம்ஸில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் விஜய் கோயலுக்கு (63), நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, எய்ம்ஸ் இயக்குநரும், பிரபல நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணருமான மருத்துவர் ரன்தீப் குலேரியா கண்காணிப்பில் தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com